search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 180 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது வரை 92,472 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய பாசிட்டிவ் ரேட் .77 சதவீதம் ஆகும். 180 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,14,023 ஆக உயர்ந்துள்ளது.
     
    இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 4.23 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 177.70 கோடியை தாண்டியுள்ளது.

    Next Story
    ×