என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க. ஓரங்கட்டப்படும்- அகிலேஷ் யாதவ்
Byமாலை மலர்20 Feb 2022 11:06 AM GMT (Updated: 20 Feb 2022 11:06 AM GMT)
இதுவரை நடந்த 2 கட்ட தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி உறுதியானதாக அகிலேஷ் யாதவ் கூறினார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் கர்ஹால் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தன் மனைவியுடன் ஜஸ்வந்த் நகரில் ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தர பிரதேச தேர்தல் மூலம் பாஜக ஓரங்கட்டப்படும் என்றும், பாஜகவை விவசாயிகள் மன்னிக்க மட்டார்கள் என்றும் கூறினார்.
இதுவரை நடந்த 2 கட்ட தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி உறுதியானதாகவும் அவர் கூறினார்.
பெண் காவலர் ஒருவர் கடத்தப்பட்டு வாய்க்காலில் இறந்து கிடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக கூறினார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X