என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதிகளின் வீட்டில் காணலாம்: ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்
Byமாலை மலர்15 Feb 2022 5:26 PM GMT (Updated: 15 Feb 2022 5:26 PM GMT)
தலைவர்களின் முகத்தைப் பார்த்து ஏமாறாமல், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் "மறைந்திருக்கும் சக்திகளை" புரிந்து கொள்ள அவர்களின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராஜ்புராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கினார்.
தலைவர்களின் முகத்தைப் பார்த்து ஏமாறாமல், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் "மறைந்திருக்கும் சக்திகளை" புரிந்து கொள்ள அவர்களின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சியை குறிப்பிட்ட அவர், ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பை தேடுபவர்கள் பஞ்சாப் மாநிலத்தை அழித்துவிடுவார்கள, மாநிலம் பற்றி எரியும் என்று கடுமையாக பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கையும் ராகுல் காந்தி தாக்கி பேசினார்.
‘பஞ்சாப் மாநிலத்திற்கு மிக முக்கியமான அம்சம் அதன் அமைதிதான். இது ஒரு ஆய்வகம் அல்ல, வேதியியல் ஆய்வுக்கூடமோ அல்லது பரிசோதனைகள் செய்யக்கூடிய இடமோ அல்ல. பஞ்சாப் ஒரு எல்லை மற்றும் உணர்வுபூர்வமான மாநிலம், காங்கிரஸ் கட்சி மட்டுமே பஞ்சாபை புரிந்து கொண்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும்’ என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இதேபோல் பர்னாலாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, தீவிரவாதிகளின் வீடுகளில் கெஜ்ரிவாலை காண முடியும் என காட்டமாக விமர்சனம் செய்தார். 2017 தேர்தலின்போது மோகாவில் உள்ள முன்னாள் காலிஸ்தான் தீவிரவாதியின் வீட்டில் கெஜ்ரிவால் ஒரு இரவு தங்கியிருந்ததை ராகுல் காந்தி வெளிப்படையாக குறிப்பிட்டிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X