search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் கைது
    X
    மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் கைது

    மணிப்பூரில் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

    அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் குழு நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
    இம்பால்:

    மணிப்பூரில் சட்டசபைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் இம்பால் மேற்கு போலீஸ் கமாண்டோக்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு நடத்திய தேடுதல் வேட்டையில்  மூன்று வெவ்வேறு கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டங்கள் மற்றும் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


    Next Story
    ×