
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் சந்த்சம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
உடனே பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் அவர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான நவீன ரக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இறந்த பயங்கரவாதிகள் 3 பேரும் ஜெயிஷ்- இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும் காஷ்மீர் போலீஸ் ஜ.ஜி விஜய்குமார் தெரிவித்தார். இது தங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அவர் தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 8 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர்.