என் மலர்
செய்திகள்

முதல் மந்திரி அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல் மந்திரியின் ஆலோசகர்களாக 6 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்
ராஜஸ்தானில் பதவியேற்ற 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் 4 பேர் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முக்கிய தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால் ஏற்பட்ட மோதலை காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது.
தனது ஆதரவாளர்களுக்கு மந்திரிசபையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சச்சின் பைலட் வலியுறுத்தி வந்தார். எனவே, ராஜஸ்தான் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அசோக் கெலாட் தெரிவித்திருந்தார்.
ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அனைவரும் ராஜினாமா செய்தனர்.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. புதிதாக 15 மந்திரிகள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 4 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜிதேந்திர சிங், பாபுலால் நகர், ராஜ்குமார் சர்மா, சன்யம் லோதா, ராம்கேஷ் மீனா மற்றும் டேனிஷ் அப்ரர் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரி அசோக் கெலாட் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்...வேளாண் சட்டங்கள் வாபஸ்- 24ம் தேதி ஒப்புதல் அளிக்கிறது அமைச்சரவை
Next Story