என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு 21-ந்தேதி வரை விடுமுறை
புதுடெல்லி:
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசு பரவி வருகிறது. காற்று மாசுவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த காற்று தரமேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையொட்டி டெல்லியில் வருகிற 21-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வருகிற 21-ந் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். ரெயில்வே, மெட்ரோ ரெயில், விமான நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான பணிகளும் 21-ந் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
டெல்லியை சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் 5 மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை வருகிற 30-ந் தேதி வரை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்