search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    மும்பை குண்டுவெடிப்பு சதிகாரர்களுடன் வியாபாரம் செய்யலாமா? - நவாப் மாலிக்கிற்கு பட்னாவிஸ் கேள்வி

    போதைப் பொருள் வழக்கில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய என்.சி.பி. மண்டல இயக்குனர் சமீர் வான்கடேயின் குடும்பத்தினர் நேற்று கவர்னரை சந்தித்தனர்.
    மும்பை:

    சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

    இரு வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியதால் ஆர்யன் கான் தற்போது வெளியில் உள்ளார்.

    ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைவராக சமீர் வான்கடே செயல்பட்டு வருகிறார். ஆர்யன் கான் கைது சம்பவத்தில் இருந்து சமீர் வான்கடே மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    இதற்கிடையே, போதைப் பொருள் விவகாரம் குறித்து மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நவாப் மாலிக் மீது குற்றச்சாட்டுகளை  முன்வைத்தார். நவாப் மாலிக்கின் நிழல் உலகத்துடனான தொடர்பு குறித்த ஆதாரங்களை வெளிப்படுத்துவேன். தீபாவளி கடந்து செல்வதற்காக காத்திருக்கிறேன் என்றார்.

    நவாப் மாலிக்

    இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1993ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட சலீம் படேல் என்பவரிடமிருந்து குர்லா பகுதியில் 2.8 ஏக்கர் நிலத்தை மாலிக் வாங்கியுள்ளார். இந்த நிலம் நவாப் மாலிக் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் எப்போது நடந்தது என்பதுதான் என் கேள்வி. நீங்கள் மந்திரியாக இருந்தீர்கள். சலீம் படேல் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? சலீம் படேல் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் மற்றும் ஹசீனா பார்கரின் (தாவூத்தின் சகோதரி) டிரைவராக இருந்தார்.

    தாவூத் தப்பிய பிறகு, சலீம் படேல் மூலம் ஹசீனா பார்கர் சொத்துக்களை வாங்கினார். 1993 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம்.

    இது பாதாள உலகத்துடன் நேரடி தொடர்பு. குண்டுவெடிப்புக்கு சதி செய்தவர்களுடன் நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

    Next Story
    ×