என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி அரசுக்கு மக்களின் வேதனையை உணரும் இதயம் இருக்க வேண்டும் -ராகுல் காந்தி விமர்சனம்
Byமாலை மலர்3 Nov 2021 7:22 AM GMT (Updated: 3 Nov 2021 7:22 AM GMT)
பெட்ரோல், டீசல் மீதான வரி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை மிரட்டி பணம் பறிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி விலைவாசி உயர்வு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இது தீபாவளி பண்டிகை காலம். பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளன. விமர்சனம் செய்வதற்காக இதை கூறவில்லை. மோடி அரசுக்கு பொதுமக்களின் வேதனையை உணரும் இதயம் இருக்க வேண்டும்’ என கூறி உள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பெட்ரோல், டீசல் மீதான வரி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை மிரட்டி பணம் பறிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X