என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்திபோரா என்கவுண்டர்... பாஜக தலைவரை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
Byமாலை மலர்26 Sep 2021 8:18 AM GMT (Updated: 26 Sep 2021 8:18 AM GMT)
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் உள்ளூரில் பயங்கரவாத பயிற்சி பெற்றதும், ஒருவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதும் தெரியவந்துள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பந்திபோரா மாவட்டம் வாத்னிரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப்படையினர் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவன், பாஜக தலைவர் ஷேக் வசீம் பாரி மற்றும் அவரது குடும்பத்திரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவன்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் உள்ளூரில் பயங்கரவாத பயிற்சி பெற்றதும், ஒருவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதும் தெரியவந்துள்ளதாக ஐஜி விஜய் குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X