என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விரைவுச்சாலையால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி சுங்க வருமானம் கிடைக்கும்: நிதின் கட்காரி
Byமாலை மலர்20 Sep 2021 2:11 AM GMT (Updated: 20 Sep 2021 2:11 AM GMT)
அடுத்த 5 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வருடாந்திர சுங்கச்சாவடி வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயரும்.
புதுடெல்லி :
டெல்லி-மும்பை இடையே 8 வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சாலையால் பயண நேரம் 24 மணியில் இருந்து 12 மணியாக குறையும்.
மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, கடந்த சில நாட்களாக சாலையின் ஆய்வுப்பணியை மேற்கொண்டார். நேற்று அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெல்லி-மும்பை விரைவு சாலையால், சுங்கச்சாவடி வருமானம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடிவரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், வருவாய் ஈட்டுவதில் தங்கச்சுரங்கம் போன்றது. அடுத்த 5 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வருடாந்திர சுங்கச்சாவடி வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X