search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அமரீந்தர் சிங்
    X
    ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அமரீந்தர் சிங்

    பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா

    பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது.
    பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அரசின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன் ராஜினாமா கடிதத்தை, பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்பித்தார் அமரீந்தர் சிங். 

    அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே, அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா  செய்யலாம் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
    Next Story
    ×