என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறைப்பு
Byமாலை மலர்18 Sep 2021 6:26 AM GMT (Updated: 18 Sep 2021 8:29 AM GMT)
கொரோனா பாதிக்கப்படுபவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது 7 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி 14 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான இந்த சிறப்பு சலுகையில் கேரள அரசுமாற்றங்களை செய்துள்ளது. அதன்படி கொரோனா பாதிக்கப்படுபவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது 7 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. தனிமையில் இருக்கும் காலமும் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் தனிமை முடிந்த பிறகு நெகட்டிவ் ரிசல்ட் வந்தவர்கள் உடனே அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி 14 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
அதுதவிர கொரோனா பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவமனை ஆவணங்களின் அடிப்படையில் சிகிச்சை காலம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான இந்த சிறப்பு சலுகையில் கேரள அரசுமாற்றங்களை செய்துள்ளது. அதன்படி கொரோனா பாதிக்கப்படுபவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது 7 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. தனிமையில் இருக்கும் காலமும் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் தனிமை முடிந்த பிறகு நெகட்டிவ் ரிசல்ட் வந்தவர்கள் உடனே அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகி இருந்தால் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... சமூக நீதி நாள் கொண்டாட்டம் சமத்துவத்தின் அடையாளம்- திருமாவளவன் அறிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X