என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை உடனே தடை செய்ய வேண்டும் -கெஜ்ரிவால்
By
மாலை மலர்21 Dec 2020 10:05 AM GMT (Updated: 21 Dec 2020 10:05 AM GMT)

பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதால் அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்களை தடை செய்யும்படி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் ஏராளமான நாடுகள் பிரட்டனுக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து டெல்லிக்கு வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்ய வேண்டும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு எச்சரிக்கையுடன் இருப்பதால் மக்கள் பயப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
