என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா ஆதரவாளராக குற்றம் சாட்டப்பட்ட ‘பேஸ்புக்’ பெண் நிர்வாகி திடீர் விலகல்
Byமாலை மலர்27 Oct 2020 10:00 PM GMT (Updated: 27 Oct 2020 10:00 PM GMT)
பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேஸ்புக் பெண் நிர்வாகி அங்கிதாஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார்.
புதுடெல்லி:
‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் இந்தியாவுக்கான கொள்கை பிரிவு தலைவராக இருந்தவர் அங்கிதாஸ். அவர், பா.ஜனதா மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுடைய வெறுப்பு பேச்சுகளை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்குவதற்கு முட்டுக்கட்டை போட்டதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று கடந்த ஆகஸ்டு மாதம் செய்தி வெளியிட்டது.
மேலும், ‘பேஸ்புக்’ ஊழியர்களுக்கான தனி குழுவில் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது. இது சர்ச்சை ஆனதால், சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு அங்கிதாஸ் அழைக்கப்பட்டார். அவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தன.
இந்த நிலையில், அங்கிதாஸ் நேற்று ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் இருந்து விலகினார். பொதுச்சேவையில் ஈடுபடுவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். ‘பேஸ்புக்’ இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் அஜித் மோகனும் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 9 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சியில் அங்கிதாஸ் முக்கிய பங்கு வகித்ததாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் இந்தியாவுக்கான கொள்கை பிரிவு தலைவராக இருந்தவர் அங்கிதாஸ். அவர், பா.ஜனதா மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுடைய வெறுப்பு பேச்சுகளை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்குவதற்கு முட்டுக்கட்டை போட்டதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று கடந்த ஆகஸ்டு மாதம் செய்தி வெளியிட்டது.
மேலும், ‘பேஸ்புக்’ ஊழியர்களுக்கான தனி குழுவில் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது. இது சர்ச்சை ஆனதால், சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு அங்கிதாஸ் அழைக்கப்பட்டார். அவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தன.
இந்த நிலையில், அங்கிதாஸ் நேற்று ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் இருந்து விலகினார். பொதுச்சேவையில் ஈடுபடுவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். ‘பேஸ்புக்’ இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் அஜித் மோகனும் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 9 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சியில் அங்கிதாஸ் முக்கிய பங்கு வகித்ததாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X