search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

    கர்நாடகாவில் இன்று மேலும் 5,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 5,018 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,70,604 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,542 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,005 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,53,829 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,06,214 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    Next Story
    ×