search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம்
    X
    எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்- இந்திய வீரர்கள் பதிலடி

    காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது.
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரகம் வாயிலாக அந்நாட்டு அரசுக்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. 

    மான்கோட் செக்டாரில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×