search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்மோகன் ரெட்டி, எடியூரப்பா
    X
    ஜெகன்மோகன் ரெட்டி, எடியூரப்பா

    ஆந்திரா, கர்நாடகா 2 மாநில முதல்-அமைச்சர்கள் திருப்பதி வருகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆந்திரா, கர்நாடகா 2 மாநில முதல்-அமைச்சர்கள் திருப்பதி வருகையால் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் ஏழுமலையான் கோவில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    கருடசேவையின் போது அரசு சார்பில பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதையொட்டி ஆந்திர மாநில முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு இன்று பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.

    இதையொட்டி அவர் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    இதையடுத்து மாலை 5.45 மணிக்கு திருமலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகிறார். அங்கிருந்து தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து கொண்டு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சமர்ப்பிக்கிறார்.

    கர்நாடகா அரசு சார்பில் திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இதற்கு அடிக்கல் நாட்டுவதற்காக கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா இன்று மாலை திருப்பதிக்கு வருகிறார்.

    நாளை காலை 6.25 மணிக்கு ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா ஆகியோர் வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

    பின்னர் 8.10 மணிக்கு கோவில் பின்புறம் ரூ.200 கோடியில் கட்டப்பட உள்ள பக்தர்களுக்கான ஓய்வறைக்கு முதல்-அமைச்சர்கள் ஜெகன்மோகன் ரெட்டி, எடியூரப்பா ஆகியோர் அடிக்கல் நாட்டுகின்றனர்.

    2 முதல்-மந்திரிகள் வருகையால் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் ஏழுமலையான் கோவில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×