search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று

    கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

    இந்நிலையில் கேரளாவில் இன்று 3 ஆயிரத்தை நெருங்கி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று 2,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,02,191 ஆகும். 

    கொரோனா பாதிப்புக்கு இன்று 14 பேர் உயிரிழந்துள்ளநிலையில், இதுவரை 410 பேர் பலியாகி உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,657 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 73,904 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 27,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×