search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    நீட் தேர்வுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    நீட் தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி, அரசியல் கட்சிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. 

    அதன்பின்னர் கொரோனா தொற்றின் வீரியம் குறையாததால், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி மேலும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களும் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. நீட் தேர்வு தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுவிட்டதாகவும், மறுஆய்வு மனுக்கள் கூட தள்ளுபடி செய்யப்படுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீட் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்திருந்தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். 

    Next Story
    ×