என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகை கங்கனா போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து விசாரணை: மந்திரி அனில் தேஷ்முக் தகவல்
Byமாலை மலர்9 Sep 2020 3:43 AM GMT (Updated: 9 Sep 2020 3:43 AM GMT)
கங்கனா ரணாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
மும்பை :
நடிகை கங்கனா ரணாவத்தின் முன்னாள் காதலன் ஆத்யாயன் சுமன். இவர் பேட்டி ஒன்றில் கங்கனா போதைப்பொருள் பயன்படுத்துவார் என்றும், தன்னை அதை பயன்படுத்த வலியுறுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘பழம்பெரும் நடிகர் சேகர் சுமனின் மகனான ஆத்யாயன் சுமனுடன் நடிகை கங்கனா உறவில் இருந்தார். அப்போது கங்கனா போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள்" என்றார்.
மும்பை நகர் மற்றும் மும்பை போலீசாரை பற்றி நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியினர் எதிர்ப்புக்கு இடையே இன்று (புதன்கிழமை) மும்பை வருவதாக கங்கனா ரணாவத் சவால் விட்டு இருந்தார். மும்பை வரும்போது நடிகை கங்கனா ரணாவத்துக்கு இந்திய குடியரசு கட்சியினர் (ஏ) பாதுகாப்பு வழங்குவார்கள் என அக்கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத்தின் முன்னாள் காதலன் ஆத்யாயன் சுமன். இவர் பேட்டி ஒன்றில் கங்கனா போதைப்பொருள் பயன்படுத்துவார் என்றும், தன்னை அதை பயன்படுத்த வலியுறுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘பழம்பெரும் நடிகர் சேகர் சுமனின் மகனான ஆத்யாயன் சுமனுடன் நடிகை கங்கனா உறவில் இருந்தார். அப்போது கங்கனா போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள்" என்றார்.
மும்பை நகர் மற்றும் மும்பை போலீசாரை பற்றி நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியினர் எதிர்ப்புக்கு இடையே இன்று (புதன்கிழமை) மும்பை வருவதாக கங்கனா ரணாவத் சவால் விட்டு இருந்தார். மும்பை வரும்போது நடிகை கங்கனா ரணாவத்துக்கு இந்திய குடியரசு கட்சியினர் (ஏ) பாதுகாப்பு வழங்குவார்கள் என அக்கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X