என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன ராணுவ தாக்குதலுக்கு பலியான வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்- அமித்ஷா உருக்கம்
Byமாலை மலர்18 Jun 2020 3:58 AM GMT (Updated: 18 Jun 2020 3:58 AM GMT)
சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியானது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.
அவற்றில் அவர் கூறியிருப்பதாவது:-
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் துணிச்சலான வீரர்களை பறிகொடுத்த வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவர்களின் உயரிய தியாகத்துக்காக, அவர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்.
ஒட்டுமொத்த நாடும், மோடி அரசும் இந்த துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறது.
இந்திய நிலப்பகுதி பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அந்த மாவீரர்களுக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது.
அவர்களின் துணிச்சல், இந்தியா தனது நிலப்பகுதி மீது கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அந்த மாவீரர்களை இந்திய ராணுவத்துக்கு அளித்த அவர்களின் குடும்பத்தினருக்கு நான் தலைவணங்குகிறேன்.
இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியானது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.
அவற்றில் அவர் கூறியிருப்பதாவது:-
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் துணிச்சலான வீரர்களை பறிகொடுத்த வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவர்களின் உயரிய தியாகத்துக்காக, அவர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்.
ஒட்டுமொத்த நாடும், மோடி அரசும் இந்த துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறது.
இந்திய நிலப்பகுதி பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அந்த மாவீரர்களுக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது.
அவர்களின் துணிச்சல், இந்தியா தனது நிலப்பகுதி மீது கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அந்த மாவீரர்களை இந்திய ராணுவத்துக்கு அளித்த அவர்களின் குடும்பத்தினருக்கு நான் தலைவணங்குகிறேன்.
இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X