search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள துர்கா தேவி கோவில்
    X
    கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள துர்கா தேவி கோவில்

    ஜம்மு காஷ்மீர்- பாதுகாப்பு காரணங்களுக்காக மச்சாயில் மாதா யாத்திரை ரத்து

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்முவில் மேற்கொள்ளப்படும் மச்சாயில் மாதா யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள மச்சாயில் கிராமத்தில் உள்ள துர்கா தேவி கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருவது வழக்கம். அங்கு உள்ள  படார் பள்ளத்தாக்கு மற்றும்  நீலக்கல் குகைகளையும் காண்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மச்சாயில் மாதா யாத்திரை ஜூலை 25 ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ம் தேதி வரை என மொத்தம்  43 நாட்கள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு கடந்த வாரம் தொடங்கிய இந்த யாத்திரை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், பாதுகாப்பு காரணங்களுக்காக அமர்நாத் யாத்திரை வந்த யாத்ரீகர்களை சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என மாநில ஆளுநர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×