search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவர்களுடன் கூட்டு சேர்ந்ததுதான் காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம்- வீரப்ப மொய்லி
    X

    அவர்களுடன் கூட்டு சேர்ந்ததுதான் காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம்- வீரப்ப மொய்லி

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்தது தான் காங்கிரசின் சமீபத்திய தோல்விக்கு முக்கிய காரணம் என வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். தோல்விக்கான காரணம் குறித்து கட்சி தலைமை ஆராய்ந்து வருகிறது. தோல்வி குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி கூறியதாவது:-


    கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததுதான், பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்ததற்கு முக்கிய காரணம். 

    பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, இத்தகைய தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது இல்லை. இந்த கூட்டணிக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. இரண்டு கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வாக்காளர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதற்கு இந்த தேர்தல் முடிவுகள்தான் சான்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட மொய்லி, பாஜக வேட்பாளர் பச்சேகவுடாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×