search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது: தியானத்தை முடித்தபின் பிரதமர் மோடி பேட்டி
    X

    கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது: தியானத்தை முடித்தபின் பிரதமர் மோடி பேட்டி

    கேதார்நாத் புனித குகையில் தியானத்தை முடித்த பிரதமர் மோடி, எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார்.
    பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். இன்று காலை வரை தியானம் இருப்பார் என்று கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை வரை தியானம் இருந்த பிரதமர், தியானத்தை முடித்த பின்னர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘கேதார்நாத்தில் வழிபட்டதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது.



    கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றி வருகிறேன். காணொலி காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. நாட்டில் நடப்பதில் இருந்து விலகி ஆன்மீக பயணமாக கேதார்நாத் வந்துள்ளேன்’’ என்றார்.
    Next Story
    ×