என் மலர்
செய்திகள்

லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய வேன்- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே இரண்டு லாரிகளுக்கு இடையே வேன் சிக்கி நசுங்கியதில், 7 பேர் உயிரிழந்தனர்.
குவாலியர்:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று இரவு மெகந்திபூர் பாலாஜி கோவிலுக்கு வேனில் சென்றனர். ஆக்ரா-ஜான்சி சாலையில் குவாலியர் அருகே உள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது, ஒரு லாரியின் பின்னால் வேன் நின்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி, வேன் மீது மோதியது.
இதனால் இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கிய வேன் நசுங்கியது. இதில், வேனுக்குள் இருந்த 2 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று இரவு மெகந்திபூர் பாலாஜி கோவிலுக்கு வேனில் சென்றனர். ஆக்ரா-ஜான்சி சாலையில் குவாலியர் அருகே உள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது, ஒரு லாரியின் பின்னால் வேன் நின்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி, வேன் மீது மோதியது.
இதனால் இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கிய வேன் நசுங்கியது. இதில், வேனுக்குள் இருந்த 2 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






