என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி வேட்பாளர் ரெட்டி மரணம்
    X

    ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி வேட்பாளர் ரெட்டி மரணம்

    ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாண் கட்சியின் வேட்பாளரும் எம்பியுமான எஸ்.பி.ஒய்.ரெட்டி மரணம் அடைந்தார். #PawanKalyan #CandidateDied
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 11-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், பவன் கல்யாணின் ஜன சேனா சார்பில் நந்தியால் தொகுதியில் எஸ்.பி.ஒய்.ரெட்டி(68) போட்டியிட்டார். உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நந்தியால் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த 2004 மற்றும் 2009ல் காங்கிரஸ் சார்பில் எஸ்.பி.ஒய். ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2014 தேர்தலின்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார். ஆனால், தேர்தல் முடிந்ததும் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார்.

    ஆனால், இந்த தேர்தலில் தெலுங்குதேசம் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. எனவே, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்து சீட் பெற்றார். ஆனால், நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் இருந்தபடியே தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. #PawanKalyan #CandidateDied
    Next Story
    ×