search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது கட்ட தேர்தல் - 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    3-வது கட்ட தேர்தல் - 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

    பாராளுமன்ற தேர்தலில் 3-வது கட்டமாக 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    அதேபோல் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களும் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். #LokSabhaElections2019 

    Next Story
    ×