என் மலர்tooltip icon

    செய்திகள்

    துஷார் வெள்ளப்பள்ளி
    X
    துஷார் வெள்ளப்பள்ளி

    பாஜக ஆதரவுடன் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்ப்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

    வயநாடு பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் துஷார் வெள்ளப்பள்ளி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #NDAcandidate #ThusharVellappally #Wayanad
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலத்தில் வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என அமித் ஷா சமீபத்தில் அறிவித்தார்.


    இந்நிலையில், வயநாடு தொகுதி தேர்தல் அதிகாரியான அம்மாவட்ட கலெக்டரிடம் துஷார் வெள்ளப்பள்ளி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் பாஜக, பாரத் தர்ம ஜன சேனா கட்சி தொண்டர்களுடன் அவர் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவையும் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துஷார் வெள்ளப்பள்ளி வயநாடு தொகுதியில் உள்ள முஸ்லிம் ஓட்டுகளை குறிவைத்து ராகுல் காந்தி இங்கு போட்டியிடுவதாக குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை இந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். #LokSabhaElections2019 #NDAcandidate #ThusharVellappally #Wayanad
    Next Story
    ×