என் மலர்
செய்திகள்

வயநாடு தொகுதியில் ராகுல் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல்
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Rahul #LokSabhaElections2019 #WayanadLS
சென்னை:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ராகுல் தற்போது அங்கு 4-வது முறையாக களம் இறங்கி உள்ளார்.
இதற்கிடையே ராகுல் காந்தி மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கடந்த மாதம் 2-வது வாரம் தகவல்கள் வெளியானது. தென்னிந்தியாவில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அவர் ஒரு தொகுதியை தேர்வு செய்வார் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம், தங்களது மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் மிக தீவிரமாக வலியுறுத்தினார்கள். இதை ராகுல் ஏற்றுக்கொண்டார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வயநாடு தொகுதி கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் 7 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன.
2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இங்கு வெற்றி பெற்றது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் சுமார் 60 சதவீதம் பேர் இருப்பதால் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சாதகமான செல்வாக்கு பெற்ற தொகுதியாக திகழ்கிறது.
இதை கருத்தில் கொண்டே வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தென் மாநிலங்கள் மீது அதிக மரியாதை, மதிப்பு ஆகியவற்றை காங்கிரஸ் வைத்திருப்பதால் ராகுல் வயநாடு தொகுதியை தேர்வு செய்தார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே மும்முனை போட்டி நடைபெற உள்ளது. ஆனால் காங்கிரசுக்கும், இந்திய கம்யூனிஸ்டுக்கும் இடையில்தான் உண்மையான போட்டி நடைபெற இருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இந்த தொகுதியில் சி.பி.சுனீர் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். ராகுல் களம் இறங்கி உள்ளதால் சுனீர் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
இதனால் கேரள மாநில கம்யூனிஸ்டு தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்று கம்யூனிஸ்டுகள் சவால் விட்டுள்ளனர்.
வயநாடு தொகுதியில் ஏப்ரல் 23-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே மனுதாக்கல் தொடங்கி விட்டது.
மனுதாக்கல் செய்ய வருகிற 4-ந்தேதி கடைசி நாளாகும். மனுதாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ளன. இதனால் அந்த தொகுதியில் மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. எனவே இன்றும், நாளையும் ராகுல் வயநாடு வர வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) ராகுல் வயநாடு வந்து மனுதாக்கல் செய்வார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்று அமிர்த சித்தயோக தினம் என்பதால் அன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
ஒருவேளை புதன்கிழமை மனுதாக்கல் செய்யாவிட்டால் மனுதாக்கலுக்கு இறுதி நாளான வியாழக்கிழமை அவர் மனுதாக்கல் செய்வார். அன்றைய தினம் அமாவாசை என்பதால் அன்று பிற்பகல் மனுதாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே புதன் அல்லது வியாழன் கிழமையில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மனுதாக்கல் செய்து விடுவார்.
வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி வரும்போது அவருடன் பிரியங்காவும் வர உள்ளார். அவர்கள் இருவரும் வயநாடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் திறந்த காரில் ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் மனுதாக்கல் செய்ய செல்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கேரளா மாநில காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.
வயநாடு தொகுதியில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் அனைத்தும் 5-ந்தேதி பரிசீலனை செய்யப்படும். தகுதியில்லாத மனுக்கள் அன்று நிராகரிக்கப்படும்.
மனுக்களை திரும்ப பெற 8-ந்தேதி கடைசி தினமாகும். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அப்போது ராகுலுடன் மோதும் வேட்பாளர்கள் யார்-யார் என்பது தெரிந்து விடும்.

ராகுல் அங்கு போட்டியிடுவதால் பா.ஜனதா அந்த தொகுதியை கேட்டு பெறும் என்று தெரிகிறது. அப்படி பெற்றால் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியையே வயநாட்டிலும் களம் இறக்கலாமா? என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அப்படி ஸ்மிரிதி இரானி களம் இறங்கினால் வயநாடு தொகுதியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். #Rahul #LokSabhaElections2019 #WayanadLS
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ராகுல் தற்போது அங்கு 4-வது முறையாக களம் இறங்கி உள்ளார்.
இதற்கிடையே ராகுல் காந்தி மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கடந்த மாதம் 2-வது வாரம் தகவல்கள் வெளியானது. தென்னிந்தியாவில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அவர் ஒரு தொகுதியை தேர்வு செய்வார் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம், தங்களது மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் மிக தீவிரமாக வலியுறுத்தினார்கள். இதை ராகுல் ஏற்றுக்கொண்டார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வயநாடு தொகுதி கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் 7 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன.
2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இங்கு வெற்றி பெற்றது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் சுமார் 60 சதவீதம் பேர் இருப்பதால் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சாதகமான செல்வாக்கு பெற்ற தொகுதியாக திகழ்கிறது.
இதை கருத்தில் கொண்டே வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தென் மாநிலங்கள் மீது அதிக மரியாதை, மதிப்பு ஆகியவற்றை காங்கிரஸ் வைத்திருப்பதால் ராகுல் வயநாடு தொகுதியை தேர்வு செய்தார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே மும்முனை போட்டி நடைபெற உள்ளது. ஆனால் காங்கிரசுக்கும், இந்திய கம்யூனிஸ்டுக்கும் இடையில்தான் உண்மையான போட்டி நடைபெற இருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இந்த தொகுதியில் சி.பி.சுனீர் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். ராகுல் களம் இறங்கி உள்ளதால் சுனீர் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
இதனால் கேரள மாநில கம்யூனிஸ்டு தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்று கம்யூனிஸ்டுகள் சவால் விட்டுள்ளனர்.
வயநாடு தொகுதியில் ஏப்ரல் 23-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே மனுதாக்கல் தொடங்கி விட்டது.
மனுதாக்கல் செய்ய வருகிற 4-ந்தேதி கடைசி நாளாகும். மனுதாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ளன. இதனால் அந்த தொகுதியில் மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. எனவே இன்றும், நாளையும் ராகுல் வயநாடு வர வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) ராகுல் வயநாடு வந்து மனுதாக்கல் செய்வார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்று அமிர்த சித்தயோக தினம் என்பதால் அன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
ஒருவேளை புதன்கிழமை மனுதாக்கல் செய்யாவிட்டால் மனுதாக்கலுக்கு இறுதி நாளான வியாழக்கிழமை அவர் மனுதாக்கல் செய்வார். அன்றைய தினம் அமாவாசை என்பதால் அன்று பிற்பகல் மனுதாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே புதன் அல்லது வியாழன் கிழமையில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மனுதாக்கல் செய்து விடுவார்.
வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி வரும்போது அவருடன் பிரியங்காவும் வர உள்ளார். அவர்கள் இருவரும் வயநாடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் திறந்த காரில் ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் மனுதாக்கல் செய்ய செல்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கேரளா மாநில காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.
வயநாடு தொகுதியில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் அனைத்தும் 5-ந்தேதி பரிசீலனை செய்யப்படும். தகுதியில்லாத மனுக்கள் அன்று நிராகரிக்கப்படும்.
மனுக்களை திரும்ப பெற 8-ந்தேதி கடைசி தினமாகும். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அப்போது ராகுலுடன் மோதும் வேட்பாளர்கள் யார்-யார் என்பது தெரிந்து விடும்.
வயநாடு தொகுதியை பா.ஜனதா தனது கூட்டணியில் இருக்கும் பி.டி.ஜே. கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. அந்த கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

ராகுல் அங்கு போட்டியிடுவதால் பா.ஜனதா அந்த தொகுதியை கேட்டு பெறும் என்று தெரிகிறது. அப்படி பெற்றால் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியையே வயநாட்டிலும் களம் இறக்கலாமா? என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அப்படி ஸ்மிரிதி இரானி களம் இறங்கினால் வயநாடு தொகுதியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். #Rahul #LokSabhaElections2019 #WayanadLS
Next Story






