search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தாவில் விக்டோரியா மகால் மீது பறந்த ஆளில்லா விமானம் - சீன வாலிபர் கைது
    X

    கொல்கத்தாவில் விக்டோரியா மகால் மீது பறந்த ஆளில்லா விமானம் - சீன வாலிபர் கைது

    கொல்கத்தாவில் புகழ்பெற்ற விக்டோரியா மகால் மீது பறந்த ஆளில்லா விமானம் தொடர்பாக சீன வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் புகழ்பெற்ற விக்டோரியா மகால் மீது சிறிய ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது.

    இதை அறிந்த போலீசார் உடனே அப்பகுதிக்கு சென்றனர். ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட சீன நாட்டை சேர்ந்த லீ வெய்யை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, சீன வாலிபர் லீ ஜிவெய் மலேசியாவில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். அவர் சிறு ஆளில்லா விமானம் பறக்கவிட்டதற்கான உண்மையான நோக்கம் குறித்து விசாரித்து வருகிறோம்.

    விக்டோரியா மகாலில் இருந்து சிறிய தூரத்தில் துறைமுகம், போன்ற முக்கிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆளில்லா விமானம் பறக்கவிட அனுமதி பெற வேண்டும். ஆனால் அவர் அனுமதி எதுவும் பெறவில்லை என்றனர்.
    Next Story
    ×