search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளி கைது
    X

    ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளி கைது

    ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டவனை போலீசார் கைது செய்துள்ளனர். வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி பணம் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது பெயர் நவாப்கான் (36). ஜீப் டிரைவரான இவன் பாகிஸ்தான் எல்லை அருகேயுள்ள சாம் பகுதியை சேர்ந்தவன். அவன் பாகிஸ்தானுக்கு உளவாளிவாக செயல்பட்டு வந்தான்.

    எனவே அவனை போலீசார் கைது செய்தனர். அவன் ‘வாட்ஸ்அப்’ மூலம் பாகிஸ்தானுக்கு தகவல்களை அனுப்பி வந்தான். அதற்காக பாகிஸ்தானின் ‘ஐ.எஸ்.ஐ.’ உளவு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த தகவலை உளவுத்துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் உமேஷ்மிஸ்ரா தெரிவித்தார்.

    நவாப்கான் கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தினரை சந்தித்தான். அங்கு அவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவனிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×