என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிர்க்க முடியாது - எஸ்.எம்.கிருஷ்ணா
Byமாலை மலர்12 March 2019 3:00 AM GMT (Updated: 12 March 2019 5:11 AM GMT)
மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிா்க்க முடியாது என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். #SMKrishna #PMModi
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாங்கள் அனைவரும் முடிந்தவரை எங்களின் முயற்சிகளை மேற்கொள்வோம். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூருவின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தேன். இதை நகர மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
தேவேகவுடா, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவதால் பா.ஜனதாவின் வெற்றியை பாதிக்காது. தனிப்பட்ட நபரை விட, கொள்கையே முக்கியமானது. ஆனால் அதற்கு பிரதமர் மோடி அப்பாற்பட்டவர். பா.ஜனதாவின் கொள்கையை அடிப்படையாக வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்.
யார் நல்ல முறையில் பணியாற்றுகிறார்கள் என்பது பெங்களூரு மக்களின் மனதில் இருக்கிறது. பெங்களூருவில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது.
இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். #SMKrishna #PMModi
முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மோடி மீண்டும் பிரதமராவது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நான் கொள்கையில் நம்பிக்கை கொண்டவன். இதன் காரணமாக நான் அதிக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வேன். பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வேன்.
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாங்கள் அனைவரும் முடிந்தவரை எங்களின் முயற்சிகளை மேற்கொள்வோம். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூருவின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தேன். இதை நகர மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
தேவேகவுடா, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவதால் பா.ஜனதாவின் வெற்றியை பாதிக்காது. தனிப்பட்ட நபரை விட, கொள்கையே முக்கியமானது. ஆனால் அதற்கு பிரதமர் மோடி அப்பாற்பட்டவர். பா.ஜனதாவின் கொள்கையை அடிப்படையாக வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்.
யார் நல்ல முறையில் பணியாற்றுகிறார்கள் என்பது பெங்களூரு மக்களின் மனதில் இருக்கிறது. பெங்களூருவில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது.
இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். #SMKrishna #PMModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X