search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு
    X

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. #LokSabha #Election #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. இந்தியில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், “குழல் ஊதியாகி விட்டது. இனி பொதுமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பொய்களை எதிர்த்து போராட போதுமான தயார் நிலையில் இருக்கிறோம். இந்த அரசின் பொய்யர்களை நாங்கள் தோற்கடிப்போம். எங்களுக்குத்தான் வெற்றி. வெற்றிக்கு தயாராகி விட்டோம்” என கூறப்பட்டுள்ளது.

    மேலும், “போருக்கு தயாராகி விட்டோம். 2019-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு உண்மை வெற்றி தேடித்தரும்” எனவும் கூறி உள்ளது.

    2 நிமிட வீடியோ ஒன்றையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களை சந்திப்பதுபோன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. 
    Next Story
    ×