என் மலர்
செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தகுந்த பதிலடி
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது. #Pakviolatesceasefire
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் இன்று மதியம் 1.15 மணியளவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது என தெரிவித்துள்ளார்.
#Pakviolatesceasefire
Next Story