search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி
    X

    குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி

    குஜராத்தில் மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்து 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியாகினர். #Gujarat #KiteString #SlitThroat
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் காற்றாடி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி ஏராளமானோர் கட்டிடங்களின் மேலே நின்று காற்றாடிகளை பறக்க விட்டனர். மேசானா பகுதியில் சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்ததில் அவன் உயிரிழந்தான்.

    இதேபோல் மாஞ்சா நூல் அறுத்து மேலும் 4 பேர் பலியாகினர். ஆமதாபாத், சூரத், ராஜ்கோட் உள்பட பல இடங்களில் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.  #Gujarat #KiteString #SlitThroat
    Next Story
    ×