என் மலர்
செய்திகள்

சபரிமலை விவகாரம் - கேரளாவில் நாளை பெண்கள் மனித சங்கிலி போராட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை மாலை 4 மணிக்கு பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். #Sabarimalai #AyyappaTemple
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். ‘பெண்கள் சுவர்’ எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை நடக்கிறது.
மேற்கண்ட 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர்.
நடிகை சுகாசினி, ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Sabarimalai #AyyappaTemple
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். ‘பெண்கள் சுவர்’ எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை நடக்கிறது.
மேற்கண்ட 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர்.
நடிகை சுகாசினி, ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Sabarimalai #AyyappaTemple
Next Story






