என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக அரசின் பொறுப்பற்ற கொள்கைகளே புலந்த்சாகர் வன்முறைக்கு காரணம்- மாயாவதி தாக்கு
Byமாலை மலர்4 Dec 2018 10:07 AM GMT (Updated: 4 Dec 2018 10:07 AM GMT)
உத்தரப்பிரதேச அரசின் பொறுப்பற்ற, தவறான கொள்கைகளே புலந்த்சாகர் வன்முறைக்கு காரணம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். #BulandshahrViolence #Mayawati
லக்னோ:
இந்த வன்முறைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசாங்கத்தின் பொறுப்பற்ற மற்றும் தவறான கொள்கைகளால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு நபர் இறந்ததாகவும் அவர் கூறினார். அத்துடன், இங்கு ஒரு அரசாங்கம் உள்ளது என மக்கள் உணரும் வகையில், வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தினார்.
வன்முறையில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாயாவதி, கும்பலாக சேர்ந்து தாக்குவதை தடுக்க சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறினார். #BulandshahrViolence #Mayawati
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டதாக கூறி ஒரு கும்பல் திடீர் போராட்டம் நடத்தியது. இதில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
வன்முறையில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாயாவதி, கும்பலாக சேர்ந்து தாக்குவதை தடுக்க சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறினார். #BulandshahrViolence #Mayawati
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X