என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் - ம.பி. தேர்தல் பிரசாரத்தில் ராகுல் ஆவேசம்
Byமாலை மலர்25 Nov 2018 3:29 AM GMT (Updated: 25 Nov 2018 3:29 AM GMT)
எல்லோரின் வங்கிக்கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்து விட்டு, பிரதமர் மோடி மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்று மத்தியபிரதேச தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். #RahulGandhi #Congress
சாகர்:
மத்திய பிரதேச மாநிலத்தில் 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறை அந்த ஆட்சியை வீழ்த்தி, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு சாகர் மற்றும் தாமோ ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அவர் பிரதமர் மோடியை ஆவேசமாக தாக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணத்தை இங்கே மீட்டு வந்து எல்லோரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி வழங்கி பிரசாரம் செய்தார்.
அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் பிரசாரம் செய்தார்.
ஆனால் சொன்னபடி செய்யாமல் அவர் மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று மோடிக்கு பயம் வந்து விட்டது. அதனாலேதான், அவர் மனதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கண்ணியமாக பேசுகிறார். அவர் ஊழலில் ஈடுபட்டிருந்தாலும், எங்களுக்கு எதிராக எதையும் சொன்னால்கூட அவர் கண்ணியமாகப் பேசுகிறார்.
அந்த கண்ணியம் மோடியிடம் இல்லாததால்தான், காங்கிரசையும், எனது குடும்ப உறுப்பினர்களையும் தாக்குகிறார். ஆனால் நான் எப்போதும் கண்ணியமாகத்தான் பேசுவேன்.
மோடியின் பேச்சை நீங்கள் கேட்டால், அவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதையும், வெறுப்புணர்வுடன் பேசுவதையும் கேட்க முடியும். அவர் பொய் பேசுகிறார். அவர் மீது மக்களும், இளைய தலைமுறையினரும் வைத்திருந்த நம்பிக்கை போய் விட்டது.
மோடி பொய் பேசுகிறார் என்று இப்போது மக்களே சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #Congress
மத்திய பிரதேச மாநிலத்தில் 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறை அந்த ஆட்சியை வீழ்த்தி, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு சாகர் மற்றும் தாமோ ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அவர் பிரதமர் மோடியை ஆவேசமாக தாக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணத்தை இங்கே மீட்டு வந்து எல்லோரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி வழங்கி பிரசாரம் செய்தார்.
அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் பிரசாரம் செய்தார்.
ஆனால் சொன்னபடி செய்யாமல் அவர் மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று மோடிக்கு பயம் வந்து விட்டது. அதனாலேதான், அவர் மனதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கண்ணியமாக பேசுகிறார். அவர் ஊழலில் ஈடுபட்டிருந்தாலும், எங்களுக்கு எதிராக எதையும் சொன்னால்கூட அவர் கண்ணியமாகப் பேசுகிறார்.
அந்த கண்ணியம் மோடியிடம் இல்லாததால்தான், காங்கிரசையும், எனது குடும்ப உறுப்பினர்களையும் தாக்குகிறார். ஆனால் நான் எப்போதும் கண்ணியமாகத்தான் பேசுவேன்.
மோடியின் பேச்சை நீங்கள் கேட்டால், அவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதையும், வெறுப்புணர்வுடன் பேசுவதையும் கேட்க முடியும். அவர் பொய் பேசுகிறார். அவர் மீது மக்களும், இளைய தலைமுறையினரும் வைத்திருந்த நம்பிக்கை போய் விட்டது.
மோடி பொய் பேசுகிறார் என்று இப்போது மக்களே சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X