என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி தேவை - உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை
Byமாலை மலர்22 Nov 2018 3:47 AM GMT (Updated: 22 Nov 2018 3:47 AM GMT)
கஜா புயல் நிவாரணத்துக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #HomeMinistry
புதுடெல்லி:
இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்று வருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.
இன்று காலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்திக்க உள்ள நிலையில், கஜா புயல் சேத விவரம் மற்றும் தேவைப்படும் நிவாரணம் தொடர்பான தமிழக அரசின் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
அதில், கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருப்பதாகவும், இடைக்கால நிவாரணமாக 1500 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #HomeMinistry
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சமீபத்தில் தாக்கிய கஜா புயல் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்று வருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.
இன்று காலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்திக்க உள்ள நிலையில், கஜா புயல் சேத விவரம் மற்றும் தேவைப்படும் நிவாரணம் தொடர்பான தமிழக அரசின் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
அதில், கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருப்பதாகவும், இடைக்கால நிவாரணமாக 1500 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #HomeMinistry
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X