என் மலர்
செய்திகள்

காப்பகத்தில் தீபாவளி திருநாள் - மனநலம் பாதித்த 300 பேர் உற்சாக கொண்டாட்டம்
ஒடிசாவில் உள்ள காப்பகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 300 பேர் விளக்கு ஏற்றியும் மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மிசன் அஷரா என்ற காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேர் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்று தீபாவளி பண்டிகையை அனுபவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மிஷன் அஸ்ரா இல்லம் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு, பிரமாண்டமாக விழா நடத்தப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விளக்கு ஏற்றியும் மத்தாப்புகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களைப் பொருத்தவரை பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். பெரும்பாலான மக்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். சிலர் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் விடுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மிசன் அஷரா என்ற காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேர் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்று தீபாவளி பண்டிகையை அனுபவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மிஷன் அஸ்ரா இல்லம் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு, பிரமாண்டமாக விழா நடத்தப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விளக்கு ஏற்றியும் மத்தாப்புகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
Next Story