search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக இடைத்தேர்தல் - 2 சட்டசபை, 3 மக்களவை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
    X

    கர்நாடக இடைத்தேர்தல் - 2 சட்டசபை, 3 மக்களவை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டசபை மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. #KarnatakaBypolls #Shimoga
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.  பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



    மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஷிமோகா தொகுதியில் தன் மகன் ராகவேந்திரா வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என்கிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இதேபோல் பெல்லாரி, ஜம்கண்டியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.  #KarnatakaBypolls #Shimoga
    Next Story
    ×