என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நட்புறவை காத்துக் கொள்ளும் முயற்சியில் ரஷ்ய அதிபர் - 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை
Byமாலை மலர்28 Sep 2018 11:47 AM GMT (Updated: 28 Sep 2018 11:47 AM GMT)
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ள நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
புதுடெல்லி:
இந்தியா ஒரு நடுநிலையான நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வருகிறது. உலக அரங்கில் இருதுருவங்களாக பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுடனும் இந்தியா நட்புடன் உள்ளது.
இதையடுத்து, சமீபத்தில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா ரஷ்யா இடையேயான நட்பு பாதிக்கப்படும் சூழல் நிலவியது.
இந்நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
இந்தியா ஒரு நடுநிலையான நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வருகிறது. உலக அரங்கில் இருதுருவங்களாக பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுடனும் இந்தியா நட்புடன் உள்ளது.
இதையடுத்து, சமீபத்தில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா ரஷ்யா இடையேயான நட்பு பாதிக்கப்படும் சூழல் நிலவியது.
ஏனெனில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதால், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை இந்தியா மீதும் விதிக்க முடியும். இதையடுத்து, ரஷ்யாவுடனான நட்பை இந்தியா கைவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என்றும், இருநாட்டு நட்பு தொடரும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X