search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாகப்பட்டனத்தில் எம்.எல்.ஏ.கொலைக்கு கண்டனம் - காவல் நிலையம் எரிப்பு, பதற்றம்
    X

    விசாகப்பட்டனத்தில் எம்.எல்.ஏ.கொலைக்கு கண்டனம் - காவல் நிலையம் எரிப்பு, பதற்றம்

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டனம் மாவட்டத்திம் தெலிங்கு தேசம் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. இன்று கொல்லப்படதற்கு கண்டனம் தெரிவித்து காவல் நிலையம் தீயிட்டு எரிக்கப்பட்டது. #TDPMLAshotdead #Vizagpolicestations
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம்  எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர்  இன்று தங்களது ஆதரவாளர்களுடன் தொகுதி மக்களை சந்திக்கச் சென்றனர். 

    அவர்கள் வந்த காரை சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள்  துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் கொல்லப்பட்டனர். 

    அவர்கள் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தனர். எம்.எல்.ஏ.வை சரியான முறையில் பாதுகாக்க தவறிய போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சில பழங்குடியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதுடன் கடுமையாக தாக்கினர். 

    அரக்கு மற்றும் தும்ரிகுடா காவல் நிலையங்களுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடியதுடன் தீயிட்டு எரித்தனர். காவல் நிலையம் மற்றும் அதன் அருகாமையில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாகின.

    இதனால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக போலீஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. #TDPMLAshotdead #Vizagpolicestations 
    Next Story
    ×