search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி - பிரதமர் வாழ்த்து
    X

    இன்று ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி - பிரதமர் வாழ்த்து

    இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TeachersDay
    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்” என்று ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த சிறந்த நாளில் ஆசிரிய சமூகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இளம் மனங்களை வடிவமைப்பதிலும் தேசத்தை கட்டமைப்பதிலும் ஆசிரியரிகளின் பங்களிப்பு முக்கியமானது. நமது முன்னாள் ஜனாதிபதியும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இன்று அவரை நாம் வணங்குவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. #TeachersDay

    Next Story
    ×