search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இன்றி தவிக்கும் தங்க மங்கை சரிதா
    X

    இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இன்றி தவிக்கும் தங்க மங்கை சரிதா

    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை சரிதா, இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இன்றி தவித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #AsianGames2018 #SaritaGaekwad
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் டாங் நகரின் கர்டாயம்பா என்ற கிராமத்தில், லட்சுமணன், ரேனு தம்பதிக்கு பிறந்தவர் சரிதா. ஏழை விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த சரிதா இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4x400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    தனது திறமை மூலம் இந்திய நாட்டுக்கே பெருமை தேடி தந்த சரிதா, தற்போது இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்துவருகிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியதில் இருந்து இதுவரை 45 ஆயிரம் ரூபாயை அவருக்கு தர்ஷன் என்பவர் அனுப்பி உள்ளார்.

    கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ள இவருக்கு குஜராத் அரசு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவித்தது. ஆனால் இந்த தொகை அவருக்கு இன்னும் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு தங்கம் வென்றதற்காக நேற்று குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி தலைமையிலான அரசு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #SaritaGaekwad
    Next Story
    ×