என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகள் - மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
Byமாலை மலர்30 Aug 2018 9:30 PM GMT (Updated: 30 Aug 2018 9:30 PM GMT)
அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பின்னர் இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் டெல்லியில் 2 தனிக்கோர்ட்டுகளும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தலா ஒரு தனிக்கோர்ட்டும் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தனிக்கோர்ட்டுகள் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகள் அறிவிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பிக்கும் கட்டாய சூழ்நிலையை அரசு ஏற்படுத்துவதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தாங்கள் அதை விரும்பவில்லை என்றும் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X