search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்- சந்திரசேகரராவ் முடிவு
    X

    தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்- சந்திரசேகரராவ் முடிவு

    தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருக்கிறார். இங்கு அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற வேண்டும்.

    ஆனால் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் ஐதராபாத்தில் கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மனை திடீரென நேரில் சந்தித்து பேசினார்.

    அவரது மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியுமான கே.டி.ராமாராவ் டெல்லியில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தெலுங்கானா அரசின் தலைமை ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான ராஜிவ்சர்மா டெல்லி சென்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவை சந்தித்து பேசினார்.



    இந்த ஆண்டு இறுதியில் சத்திஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அத்துடன் சேர்த்து தெலுங்கானாவுக்கும் சட்ட சபை தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    இவர்களின் இந்த திடீர் சந்திப்பு தேர்தல் குறித்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க இருப்பதாக முதல்-மந்திரி சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார். #ChandrasekharRao
    Next Story
    ×