search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை சுதந்திர தினம் - நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X

    நாளை சுதந்திர தினம் - நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். #IndependenceDay #RamNathKovind
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நாளை 72-வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.



    அதில், “ சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றுகிறார். முதலில் இந்தியிலும், அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு இரவு 8 மணியளவில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndependenceDay #RamNathKovind
    Next Story
    ×