search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனேவில் 3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
    X

    புனேவில் 3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 3 கோடி மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Pune #DemonetisedCurrency
    மும்பை:

    மோடி தலைமையிலான மத்திய அரசு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன், அதற்காக சிறிது கால அவகாசமும் வழங்கியது. கள்ள நோட்டுகளையும், கருப்பு பண பதுக்கலையும் தடுக்கவே இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், புனோ காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் 5 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Pune #DemonetisedCurrency
    Next Story
    ×